மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தாலும், 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இதனையடுத்து, இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவுற்ற நிலையில், இருஅணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி கேப் டவுன் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டுமினி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். காயம் காரணமாக கோலி அணியில் இடம்பெறவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோலிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். உனத்கண்ட்-க்கு பதிலாக பும்ராவும், சாஹலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேலும் இடம்பிடித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியில் ஸ்முட்ஸ்க்கு பதிலாக ஜோன்கர் மேக்ஸ் என்ற அறிமுக வீரர் களமிறங்குகிறார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?