கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 600 பேர் சொந்த ஊர் திரும்ப தேவையான உதவிகளை செய்வதாக குஜராத் அரசு உறுதி தெரிவித்துள்ளது.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு கடலில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குஜராத் கிர் சோம்நாத் பகுதியில் 600 மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்த தகவல் புதிய தலைமுறைக்கு கிடைத்தது. புயலால் அடித்துச் செல்லப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் தங்களை, கிர்சோம்நாத் கரையோரம் ஓதுங்க குஜராத் அதிகாரிகள் மறுப்பதாக பிபின் என்ற மீனவர் புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக கவலையுடன் தெரிவித்தார்.
புதிய தலைமுறை செய்தியால், இதனை அறிந்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு, கன்னியாகுமரி ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் உள்ளிட்ட அதிகாரிகள், கிர்சோம்நாத் ஆட்சியர் மற்றும் துறைமுக அதிகாரிகளை தொடர்புகொண்டு தமிழக மீனவர்கள் கரை ஒதுங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், தமிழக மீனவர்கள் 600 பேரையும் கரை ஒதுங்க அனுமதித்த கிர்சோம்நாத் துறைமுக அதிகாரிகள், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும் என உறுதியளித்தனர். குஜராத்தில் கரை ஒதுங்கியிருக்கும் 600 தமிழக மீனவர்கள் குறித்த தகவல்களும் முழுமையாக சேகரிக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?