சீனாவில் பேருந்தில் செல்ல பணம் இல்லாததால் சிறுவர்கள் இருவர், பேருந்தின் அடியில் அமர்ந்து கொண்டு 80 கி. மீ தூரம் பயணம் செய்துள்ளனர்.
சீனாவில் உள்ள தென்குவாங்ஸி கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இருக்கும் மக்கள் வறுமை காரணமாக தங்கள் பிள்ளைகளை விட்டு தொலைவில் உள்ள குவாங்டங் மாகாணத்திற்கு சென்று பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இங்குள்ள சிறுவர்கள் இருவர், தங்களின் பெற்றோர்களை பார்க்க செல்வதற்கு பணம் இல்லாததால் பேருந்தின் அடியில் அமர்ந்து ஆபத்தான பணியை மேற்கொண்டுள்ளனர்.
8 மற்றும் 9 வயதாகும் இந்த இரண்டு சிறுவர்களும் சுமார் 80 கி.மீ தூரம் வரை பேருந்து அடியில் அமர்ந்து சென்றுள்ளனர். அப்போது வழியில் இருந்த சுங்கசாவடியில் இருந்த போலீசார் பேருந்தை சோதித்துள்ளனர். பேருந்தின் அடியில் பார்த்த அவர்கள், குனிந்தப்படி அமர்ந்திருந்த சிறுவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு, அவர்களிடம் விசாரித்த போது தங்கள் பெற்றோர்களை பார்க்க செல்வதற்கு பேருந்தில் செல்ல வேண்டும், ஆனால் பணம் இல்லாததால் ஓட்டுநருக்கு தெரியாமல் பேருந்தின் அடியில் அமர்ந்து வந்ததாக தெரிவித்தனர். சிறுவர்களின் இத்தகைய செயலை சீனா அரசாங்கத்தின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!