நாச்சியார் டீஸரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பாக இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இப்படத்தின் டீஸரை கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிகாவின் கணவர் சூர்யா இணையத்தில் வெளியிட்டார். டீஸரின் இறுதியில் ஜோதிகா பேசிய ஒற்றை வார்த்தைக்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சமூகவலைதளத்திலும் இது விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில் டீஸரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பாக இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜன் என்பவர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், நாச்சியார் டீஸரில் நடிகை ஜோதிகா பெண்மையை இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதும், இயக்குநர் பாலா மீதும் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மனு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!