இயக்குனர் மிலிந்த் ரவ் ‘அவள்’ படத்தின் மூலம் பேய் படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் நடிப்பில், இயக்குனர் மிலிந்த் ரவ் இயக்கத்தில் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ள பேய்ப்படம் ‘அவள்’. இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நரம்பியல் வல்லுநராக சித்தார்த் நடித்துள்ளார் எனத் தெரிகிறது. இப்படத்தை ‘வியாகாம்18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏடாகி எண்டர்டையின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள ‘அவள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், டிரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுள்ளன.
இந்நிலையில் ‘அவள்’ படத்தின் மூலம் பேய் படங்களை அடுத்த கட்டத்திற்கு மிலிந்த ரவ் அழைத்துச் சென்றுள்ளார் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், பயத்தை அனுபவிக்க தயாராக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!