விசாகப்பட்டினத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதாவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளாவில் பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்து அண்மையில் நடந்த பாத யாத்திரை நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாரதிய ஜனதாவினர், பினராயி விஜயனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த விசாகப்பட்டினம் காவல்துறையினர் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பாரதிய ஜனதாவின் சட்ட மேலவை உறுப்பினர் மாதவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!