நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தருவது தொடர்பாக டெல்லியில் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த தினகராஜன் ராஜாமணி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடர்ந்த மனுவில் இந்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்குப் பெறுவது தொடர்பான அவசர சட்டத்தை ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு அனுப்பியதாகவும் இது தங்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி கிடைக்கப்பெற்றதாகவும் சுகாதார அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது. மேலும் நீட்டிலிருந்து விலக்கு கோரும் அவசர சட்டத்துக்கு தங்கள் அமைச்சகம் ஆதரவளிக்கவில்லை என்றும் சுகாதாரத்துறை துணை செயலாளர் அமித் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். நீட்டில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சகம் சார்பில் எந்தவொரு கூட்டமும் நடக்கவில்லை என அமித் பிஸ்வாஸ் விளக்கமளித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் ஆலோசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் டெல்லியில் முகாமிட்டு தமிழக அமைச்சர்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் தகவல்ககள் வெளியான. இந்நிலையில் நீட்டில் இருந்து விளக்கமளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai