குடிபோதையில் தள்ளாடிக் கொண்டு வந்து பாடம் நடத்திய தலைமையாசிரியரை பள்ளிக்குழந்தைகள் கேலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்கு எதிராக மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைமையாசிரியரே, குடிபோதையில் தள்ளாடிக் கொண்டு வந்தால் யாரிடம் போய் முறையிடுவது? அப்படி ஒரு சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பில்ஹவுர் நகருக்கு உட்பட்டு நிவாடா கிராமம் உள்ளது. இங்கே செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர் ஒருவர் குடிபோதையில் வந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அவரால் சரிவர நிற்கக்கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டிருந்தார். அவரை சூழ்ந்து கொண்ட பள்ளி குழந்தைகள், அவரது தலையை பிடித்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அந்த சம்பவம் வேடிக்கையாக சில மணிநேரம் நீண்டது. முயன்று முயன்று பார்த்தக் குழந்தைகளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உடனே கேலி செய்து சிரித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!