நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் பிணம் போல் படுத்து நூதன முறையில் போராட்டம் செய்தார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்று பரப்புரை தொடங்கிய சமூக ஆர்வலர் ஒருவர், இன்று கும்பகோணம் வந்து உயிரற்ற உடல் போல படுத்துக் கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார்.
மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி தங்க சண்முகம் என்பவர் கடந்த 6ஆம் தேதி நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் பரப்புரையைத் தொடங்கினார். தற்போது ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 6 மாவட்டங்களில் பரப்புரை செய்திருக்கிறார். எட்டாவது நாளாக கும்பகோணம் வந்த தங்க சண்முகம், புதிய பேருந்து நிலையத்தில் பிணம் போல் படுத்துக் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக பரப்புரை செய்தார். தனது இருசக்கர வாகன பிரச்சார பயணம் சென்னை தலைமைச் செயலகத்தில் முடியும் என்று தங்க சண்முகம் கூறினார்.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்