அந்தமான் - நிகோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.
அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பது அடிக்கடி நடைபெறும் நிகழ்வு ஆகும். இதனால் அங்குள்ள மக்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ள எந்நேரமும் தயார் நிலையிலேயே இருப்பர். மேலும், இந்தோனேஷியாவில் பெரிதளவு நிலநடுக்கம் ஏற்படும் சமயங்களிலும் அந்தமான் - நிகோபாரில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்டு.
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அந்தமான் - நிகோபார் தீவுகளில் ஏற்பட்டது. அங்குள்ள கேம்பெல் பே என்ற கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தீவுகளின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai