கடும் நிதிச்சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான் மிக அதிக வட்டி கொடுத்து 100 கோடி டாலர்களை கடனாக திரட்டியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதற்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் 7.95% என்ற முன் எப்போதும் இல்லாத அதிக வட்டிக்கு பாகிஸ்தான் அரசு புதிதாக கடன் திரட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 7 ஆண்டுகளில் திரும்பச்செலுத்தத்தக்க வகையில் லாகூர் - இஸ்லாமாபாத் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை பிணையாக வைத்து இக்கடன் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.
பாகிஸ்தானின் அன்னியச்செலாவணி பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை தற்காலிகமாக சமாளிக்க இத்தொகை பெறப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் கூறியுள்ளன.
சவுதி அரேபியாவிடம் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன் 300 கோடி டாலர்களை கடனாக பெற்ற பாகிஸ்தான் அதில் 200 கோடி டாலர்களை செலவளித்துவிட்டது. தற்போது அன்னியச்செலாவணி நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு மீண்டும் கடன் வாங்கியுள்ளது
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!