போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக, தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சார்பில் தனி அலைவரிசை ஏற்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்காக இந்திய குடிமைப் பணி தேர்வுகள் (UPSC), இந்திய பொறியியல் பணித் தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் (TNPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள், ரயில்வே பணிகளுக்கு தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இந்தத் தேர்வுகளை எழுதுவதற்காக தயாராகி வரும் போட்டியாளர்களுக்கு உதவும் வகையில், தனி அலைவரிசை ஏற்படுத்தப்படும் என கல்வி தொலைக்காட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சியில் புதிய அலைவரிசையை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய அலைவரிசையை ஏற்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை