கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில், நல்வாய்ப்பாக மீனவர்கள் உயிர் தப்பினர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை ரோந்துக் கப்பல், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த நபரின் விசைப்படகில் மோதியதில், படகு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு மீனவர்களையும், மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றியதை அடுத்து, அனைவரும் கரை சேர்ந்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடலில் மூழ்கிய விசைப்படகிற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!