இன்றைய தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் சென்னையின் முக்கியமான மேம்பாலம் கோயம்பேடு, ஜெமினி, கத்திப்பாரா தவிர பிற மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி வடபழனி, தி.நகர், ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சில மேம்பாலங்கள் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் அடையாள அட்டை சோதனை செய்யப்பட்டது. அதேபோல் பொதுமக்கள் அவசர மருத்துவ தேவைக்கு செல்பவர்கள், குடும்ப நிகழ்வுக்கு செல்பவர்கள் ஆவணம் வைத்திருக்க வேண்டும். அதன்படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்டு 372 இடத்தில் வாகன தணிக்கை நடந்துள்ளது. விதிகளை மீறும் வாகன ஒட்டிகளிடம் அபராதம், வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி: மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை கோரிக்கை - பரிந்துரைப்பதாக அமைச்சர் தகவல்
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?