உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக பரவினாலும், அதன் தாக்கம் தீவிரமாக இல்லாதது தடுபூசிகள் பலன் அளிப்பதையே காட்டுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக நல்ல பலனை அளிப்பதுடன் பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மை காக்க வல்லதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பின் சார்பில் காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருக்கும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் கோவிட் தொற்றிற்கு எதிராக அதிக அளவு பாதுகாப்பு அளிப்பதாக குறிப்பிட்டார். தடுப்பூசியின் ஆற்றல் வயது, முன்பே இருக்கும் நோய்கள் போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். ஒமைக்ரான் வகை பாதிப்பு குறித்த தகவல்கள் இப்போதுதான் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய சவுமியா சுவாமிநாதன் ஆய்வகங்களில் நடத்தப்படும் ஆய்வுகளில் தடுப்பூசிகள் கிருமியை அழிக்கும் ஆற்றல் குறைந்திருப்பதை காட்டுவதாக தெரிவித்தார்.
இதனால் தடுப்பூசி செலுத்தியவர்கள், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பிலும் ஒமைக்ரான் வகை பரவுவதாகக் கூறினார். இதனாலேயே உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். பாதிப்பு பரவும் அதே வேகத்தில் மருத்துவமனைகள் நிரம்பவில்லை என்றும் வெண்டிலேட்டர்களுக்கு தேவை அதிகரிக்கவில்லை என்பதும் நல்ல அறிகுறி என்றும் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?