தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி 17% லிருந்து 31%ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ. 3 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ.1000, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாகவும் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.
அதேபோல் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 17%லிருந்து 31% ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் வழங்க ரூ.8,894 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தவிட்டிருக்கிறார்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?