வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை தீயணைப்பு துறையினர் படகில் சென்று மீட்டனர்.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வைகை அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடைமடை பகுதியான ராமநாதபுரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராமநாதபுரத்தை அடுத்த புல்லங்குடி பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்று 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், வெள்ளப் பெருக்கில் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்தன. இதையடுத்து ஆடு மேய்ப்பவர்கள் உடனடியாக ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று கரை திரும்ப முடியாமல் தவித்த ஆடுகளை படகில் ஏற்றி மீட்டனர். உயிரை பணயம் வைத்து ஆடுகளை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!