இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை விலக்கும் கிரீமிலேயர் எனப்படும் இட ஒதுக்கீட்டு கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசு பணிகளில் உள்ள 27 சதவிகித இட ஒதுக்கீட்டை, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமையாக வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகக் கூறி இருக்கும் ஸ்டாலின் இதர பிற்படுத்தப்பட்டோரின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அளித்த பரிந்துரைப்படி, கிரீமிலேயர் உச்ச வரம்பை 15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு புறம்பான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்