பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள குவாலிட்டி இன் ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் இன்று சம்பவ இடத்திற்கு அதிரடியாக சென்ற பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன் தலைமையில், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்கு நடந்த சோதனையில் விடுதியில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாலியல் தொழிலை நடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (39), கடலூரைச் சேர்ந்த சரத்குமார் (25), வண்டலூரைச் சேர்ந்த சக்திவேல் (33), குன்றத்தூரைச் சேர்ந்த திருமலை (35), வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த குமாரவேல் (32), ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டனர்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்