தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்யலாம், கட்டுமான பணிகளை மேற்கொள்ள தற்காலிக தடை என பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் டெல்லியின் நிலையை தங்கள் மாநிலம் எதிர்கொள்ள கூடாது என்ற கவனத்தில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகள் உடன் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தி சில திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவும், மக்கள் பின்பற்றவும் சொல்லி உள்ளார்.
மக்கள் தனிப்பட்ட முறையில் தங்களது வாகனத்தில் பயனைப்பதை விட பொது போக்குவரத்தில் செல்வதை அதிகாரிகள் ஊக்கப்படுத்த சொல்லியுள்ளார். அதே போல விவசாயிகள் அறுவடைக்கு பிறகு செய்யும் வயல் எரிப்பு வழக்கத்தை கைவிடவும் சொல்லி உள்ளார். இது அந்த மாநில முதல்வர் அலுவலக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு விவகாரத்தில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை அடங்கிய அவசர கால ஆலோசனை கூட்டத்தை உடனடியாக நடத்தவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!