இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 2350 கன அடி நீர் வைகை அணைக்கு திறந்துவிடப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, வருஷநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததன் மூலமாகவும், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.கடந்த 6ஆம் தேதி வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டியதால் இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் வைகையாற்றில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.26 அடியாகவும், வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3457 கனஅடியாகவும் அதிகரிப்பதால், தற்போது வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2569 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வைகை அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!