மும்பையிலிருந்து டெல்லி வந்த ராஜ்தானி ரெயிலில் பயணிகளிடமிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து டெல்லி வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "நேற்று இரவு சாப்பிட்ட பின் திடீரென அனைவரும் உறங்கி விட்டோம். காலையில் டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையம் வந்ததும் விழித்து பார்த்த போது எங்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. உடனே நாங்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தோம். புகாரும் அளித்துள்ளோம்" என கூறினர்.
பயணிகளிடம் இருந்து சுமார் 12 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். பயணிகள் உண்ட உணவில் மயக்க மருந்து இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்