ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அனுபவமற்றவர்கள் என பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் சாடியுள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்துவுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை களமிறக்கப்போவதாகவும் அமரிந்தர் சிங் கூறியுள்ளார். தேசத்திற்கே ஆபத்தான மனிதரான சித்துவை வீழ்த்த தனது முழு பலத்தை திரட்டி போராடப்போவதாகவும் அமரிந்தர் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் உட்கட்சி பூசல் எதிரொலியாக தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது அடுத்த கட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் பேசி அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் அமரிந்தர் சிங் தெரிவித்தார்
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு