சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை விடுதியில் ஒருவாரகாலமாக தண்ணீர் வரவில்லை எனக்கூறி மருத்துவக்கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏறக்குறைய 300 பேர் தங்கி உள்ள விடுதியில் தண்ணீர் வராததால் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையின் துணை முதல்வர் நாராயணசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டம் உறுதியாக சென்றதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக விடுதி மாணவர்களுக்கு தண்ணீர் தர நடவடிக்கை எடுத்தனர். மேலும் விடுதிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டங்களை வாபஸ் பெற்றுக்கொண்டு தங்கள் பணிக்குச் சென்றனர்.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்