மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக அவரது 59 வயதை குறிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் 59 மரக்கன்றுகளை மாவட்ட எஸ்பி மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் நட்டு வைத்தனர்.
நடிகர் விவேக் இயற்கை எழில் மிகுந்த ஆர்வம் கொண்டு அனைவரையும் மரக்கன்று நடும் பணியை வலியுறுத்தியும் அவரே நேரடியாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தும் உள்ளார்.
இதற்கு பெருமை சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்கள் மூலம் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
உலக புவி தினத்தை ஒட்டியும், மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் நினைவாகவும் 59 வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும் என்றும், மாவட்ட எஸ்பி அரவிந்தன் தெரிவித்தார்.
“உலக பூமி தினம் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும் அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும் 59 மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன. விவேக் மறைந்து விட்டார் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் தமக்கு அதில் உடன்பாடில்லை. அவரது கலை சேவையிலும் இதுபோன்ற இயற்கை ஆர்வத்திலும் அவர் என்றும் மறையாமல் அதே புகழுடன் இருப்பார் என்று நம்புகிறேன்” என ரம்யா பாண்டியன் தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்