வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி காவல் நீட்டிப்புக்காக சீர்காழி நீதிமன்றம் அழைத்து வந்த போது போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக காரைக்கால் நெடுங்காடு, மேலகாசாகுடியை சேர்ந்த தீபக் ஜங்லின் 27 என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி நாகை சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் காவலர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் நாகை சிறைச்சாலையிலிருந்து தீபக் ஜங்லினை சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் செல்லும்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் பிடியில் இருந்து தீபக் ஜங்லின் தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தப்பியோடிய தீபக் ஜங்லினை சீர்காழி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதி தப்பி ஓடியது குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் இடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்
மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ