கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
வண்ணங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மக்கள் உற்சாகமாக ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிருந்தாவனத்தில் உள்ள BANKE BIHARI கோயிலில் ஒன்று திரண்டு மிகுந்த உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதே போல பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஹோலியை கொண்டாடுகின்றனர். எனினும் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் ஹோலி கொண்டாட்டத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான் , பீகார் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் மக்கள் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை