அமெரிக்காவில் குழந்தை பிறப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கர்ப்பிணி தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பிறந்த குழந்தை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்துள்ளதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார். மாடர்னா தடுப்பூசி போடப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது பெண்குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பரிசோதித்ததில் குழந்தையின் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து ஃபுளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்புசக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து கிடைத்திருக்கவேண்டும் என்கின்றனர். ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பால் கில்பர்ட் மற்றும் டாக்டர் சாத் ருத்னிக் கூறுகையில், தாங்கள் இதுகுறித்த ஆராய்ச்சி செய்வது அதிர்ஷ்டவசமாக அமைந்ததாகக் கூறுகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத கர்ப்பிணி தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில வாரங்களிலேயே குழந்தை பிறந்தும், ஆன்டிபாடிகள் குழந்தைக்கு கடத்தப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்கின்றனர். ஆனால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் மற்றும் நோய்க்கிருமியிடமிருந்து எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை என்கின்றனர்.
வீரியமிக்க நோயெதிர்ப்பு சக்தியுடன் பிறந்துள்ள குழந்தையின் தண்டுவட செல்கள் மற்றும் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதாக இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்