12 வயது மகளை பெற்றோரே ரூ.10 ஆயிரத்துக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் விற்ற சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் 12 சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சமூக நல மேம்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமியை 46 வயதான சின்ன சுப்பையா என்பவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை மீட்ட சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள், குழந்தை திருமணம் செய்ததாக சின்ன சுப்பையாவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சின்ன சுப்பையாவிடம் போலீசார் நடத்திய மேலும் சில பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 வயது சிறுமியின் பெற்றோருக்கு 16 வயதில் மற்றொரு மகள் உள்ளார். இந்த மூத்த மகளுக்கு சுவாச நோய்ப் பாதிப்பு இருந்து வருகிறது. மகளின் சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியாமல் பெற்றோர் தவித்து வந்துள்ளனர். இதற்கிடையில் 12 வயதான இளைய மகள் மீது பக்கத்து வீட்டில் வசித்துவரும் சின்ன சுப்பையாவிற்கு விருப்பம் இருந்துள்ளது. மூத்த மகளின் சிகிச்சைக்காக பணம் இல்லாமல் பெற்றோர் தவிப்பதை அறிந்துகொண்ட சுப்பையா, அவர்களுக்கு அவ்வப்போது சிறுசிறு பண உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் பேசி இளைய மகளை தனக்கு திருமணம் செய்து வைத்தால் ரூ.10 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர் தங்களது இளைய மகளை அவரது விருப்பமின்றி சின்ன சுப்பைவிற்கு திருமணம் செய்து வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சின்ன சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்து அவரை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி