இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
இந்திய பகுதிகளான லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பு ராணுவத்துக்கு மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவத்தினர் 20 பேரும், சீனா ராணுவத்தினர் 35 பேரும் உயிரிழந்தனர். எல்லைப் பகுதியில் அமைதியும், சமாதானத்தையும் மீண்டும் ஏற்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே தளபதிகள் மட்டத்திலான 10-ஆவது சுற்று பேச்சுவார்த்தை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. மோல்டோ என்ற இடத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், பாங்கங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரை பகுதிகளில் இருந்து படைகளை இரு தரப்பினரும் திரும்ப பெறுவது, மோதல் ஏற்படும் வகையிலான பிற பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது போன்றவை குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?