தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 'பட்டியலினத்தவர்களை ஆரத்தி எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை' என கூறிய பெண்ணை, ஆரத்தழுவி திமுக எம்.பி. கனிமொழி கண்ணீர் சிந்தியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. விடியலைத்தேடி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சிக்காக தருமபுரியில் திமுக எம்.பி.கனிமொழி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஏரியூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழியிடம் பெண் ஒருவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை கட்சியினரே ஒதுக்கி வைப்பதாகவும், தலைவர்கள் வரும்போது ஆரத்தி எடுக்கக் கூட அனுமதிப்பதில்லை என்றும் கண் கலங்க கூறினார். இதனைக் கேட்டதும் கண்ணீர் மல்க ஓடோடி வந்த கனிமொழி, அப்பெண்ணை ஆரத்தழுவிக் கொண்டார். இவரைப் போன்றவர்களின் கண்ணீரை துடைப்பதற்கு திமுக பாடுபடும் என கனிமொழி பேச, கூட்டத்திலிருந்த பெண்கள் தேம்பி அழுதனர். விரிவாக வாசிக்க > தருமபுரி: கண்ணீர் விட்டு கதறியழுத பெண்... கட்டியணைத்து ஆறுதல் கூறிய கனிமொழி
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?