இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதற்கட்டமாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை படுதோல்வியடைய செய்தது. இரண்டாவது போட்டியில் இரண்டு நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் இரண்டாவது போட்டியில் ரன் குவிக்க முடியாததற்கு காரணம் ஆடுகளம்தான் என இந்தியாவை கடுமையாக ட்விட்டரில் விமர்சித்திருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். அதையடுத்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்ன்.
The toss was more important to win in the 1st test than this one, as it did nothing the 1st 2 days. Then exploded. This one has been a turner from ball one. Eng should’ve bowled India out for 220. No different between spinning or seaming & Rohit showed how to play on this surface https://t.co/xg1gPDetRs
— Shane Warne (@ShaneWarne) February 14, 2021Advertisement
? 161 runs from 231 balls
? 18 fours and two sixes
A superb innings from Rohit Sharma comes to an end. He becomes Jack Leach's second victim of the day.#INDvENG | https://t.co/DSmqrU68EB pic.twitter.com/inkut0uVCe — ICC (@ICC) February 13, 2021
“முதல் போட்டியில் டாஸை வெல்வது அவசியமாக இருந்தது. ஏனென்றால் முதல் இரண்டு நாட்களுக்கு அந்த ஆடுகளத்தில் ஒன்றுமே இல்லை. மூன்றாம் நாளிலிருந்துதான் அதன் வேலையை காட்ட தொடங்கியது. ஆனால் இரண்டாவது போட்டியில் அப்படி இல்லை. முதல் பந்து வீசியதிலிருந்தே பந்து சுழல்கிறது. இங்கிலாந்து இந்தியாவை 220 ரன்களுக்குள் சுருக்கி இருக்க வேண்டும். ஸ்பின்னுக்கும், ஸ்விங்கிற்கும் அப்படி ஒன்றும் வித்யாசமில்லை. மேலும் எப்படி விளையாட வேண்டுமென அபாரமான இன்னிங்ஸ் ஆடி ரோகித் பாடம் எடுத்துள்ளார்” என வார்ன் மைக்கேல் வாகனின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ளார்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்