சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனையடுத்து இந்தப் போட்டிக்கனா டிக்கெட் விற்பனை பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் தொடங்குகிறது. ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை www.paytm.com மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம். கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை கிடையாது. 5 நாள் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட், நாள் ஒன்றுக்கு ரூ.100, ரூ.150, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பெறப்படும் ரசீதைக் கொண்டு 11 ஆம் தேதி விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் இருக்கும் பூத்தில் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறலாம்.
இந்தச் சேவை பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் இருக்கும். மைதானத்தில் போட்டியை காண வரும் ரசிகர்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?