திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் புதுசத்திரம் அருகே ஜமீன் கொரட்டூர் பகுதியில் தனியார் இன்டர்நேஷனல் மெரைன் கப்பல் கல்லூரி உள்ளது. இங்கு, நேற்று இரவு நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது இறுதியாண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஆதித்ய ஷர்மா (20) என்ற மாணவனை சேர் (பிளாஸ்டிக் நாற்காலியின்) கால் பகுதியை உடைத்து சக மாணவர்கள் குத்தியதில் அவர் சரிந்து விழுந்துள்ளார்.
இதனையடுத்து மாணவனை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்ற போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வெள்ளவேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகப்பிரியா நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் யார் கொலை செய்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கல்லூரி மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?