விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மூன்று சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் பாலவநத்தம் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர், அதே ஊரை சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு தன்னுடைய செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ததாக அச்சிறுமிகளின் பெற்றோர் கடந்த 20ஆம் தேதி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தன்மீது புகார் அளித்ததை அறிந்த ஆறுமுகம் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து தப்பி ஓடினார். சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகத்தை சூலக்கரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பாலவநத்தம் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது சூலக்கரை போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகம் என தெரியவந்தது. போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை யாரேனும் கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டுள்ளனரா என தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?