வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுகவினர் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முன்னிறுத்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் உடையார்பட்டி எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையில் தயாநிதி மாறன், சேகர் பாபு உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே சேலத்தில் ஸ்டாலின் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் அங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் ஓமலூர், அயோத்தி பட்டினம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி