கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் ஏராளமான நாடுகளுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச விரைவுத் தபால், பார்சல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளை இந்தியா முழுவதும் வழங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் ஏராளமான நாடுகளுக்கு இந்த சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, விரைவு சர்வதேச தபால் - 67 நாடுகளுக்கும், விமானம் மூலம் அனுப்பப்படும் பார்சல்கள் 82 நாடுகளுக்கும், ஐடிபிஎஸ் 15 நாடுகளுக்கும், பதிவு தபால்கள் 82 நாடுகளுக்கும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவல், சென்னை மாநகர வடக்கு பிரிவு தபால் நிலையங்களுக்கான மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்