இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் களத்தில் மிகவும் ஆக்டிவான பிளேயர். சமயங்களில் களத்திற்கு வெளியேயும் அனுபவ வீரர்கள் மற்றும் முத்திரை படைத்து வரும் வீரர்களுடன் சமூக வலைத்தளங்களில் கலந்துரையாடுவது அஷ்வினின் வாடிக்கை.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அது போல யூடியூப் சேனல் மூலமாக அஷ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹாக்குடன் பேசியுள்ளார் அஷ்வின்.
‘DRS with Ash’ எபிசோட் மூலம் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான இன்சமாம் கிரிக்கெட் உலகிற்கு எப்படி அறிமுகமானார் என்பதில் ஆரம்பித்து பல விஷயங்கள் குறித்து அவருடன் பேசியுள்ளார்.
“பாபர் அசாம் ஒரு மில்லியன் டாலர் பிளேயர் போல தெரிகிறார். ஆஸ்திரேலியாவில் சதம் விளாசியுள்ளார். அயலக மண்ணிலும் அற்புதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நம் கண்களுக்கு அவர் விருந்து படைக்கிறார். அவரது ஆட்டத்தை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என பாபரை புகழ்ந்து அஷ்வின் கேள்வி கேட்டிருப்பார்.
அதற்கு இன்சமாமும் “பாபர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது உச்சத்தை எட்டவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் அதை எட்டியதும் நிச்சயம் மேலும் சிறப்பாக விளையாடி பாபர் அசத்துவார்” என தெரிவித்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்