ஜப்பான் நாட்டின் ஹொகாய்தோ தீவில் இருக்கிறது தகிகாவா நகரம். வனத்தை ஒட்டிய இந்த நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள் மக்களையும் தாக்குகின்றன.
கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு தகிகாவாவில் கரடிகளின் தாக்குதல் மிகவும் அதிகரித்துவிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கரடி தாக்கி இருவர் உயிரிழந்துவிட்டனர். எனவே இதனை தடுப்பது குறித்து அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இறுதியில் கரடிகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக ராட்சச ஓநாய் ரோபோக்களை பயன்படுத்த அரசு முடிவு செய்தது. நான்கு கால்கள், கொடூரமான கண்கள், கூரிய பற்கள் என அச்சு அசல் ஓநாய் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், ஊருக்கு வெளியே எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளள.
ஓநாய் ரோபோக்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் கரடிகளை சரியாக அடையாளம் கண்டு ஒலி எழுப்பும். அதைக் கேட்டு பயந்து கரடிகள் ஊருக்குள் நுழையாமல் ஓடிவிடும் என ஜப்பான் அரசு நிர்வாகம் நம்புகிறது. மேலும் ஓநாய் ரோபோக்களின் சத்தம் கேட்டு உள்ளூர் மக்களும் சுதாரித்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரடிகளை விரட்ட அரசு எடுத்துள்ள இந்த முயற்சியால் தகிகாவா மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
Loading More post
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?