மகாராஷ்டிராவில் 3 ஆண்களை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிச்சென்ற பெண்ணை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தைச் சேர்ந்தவர் 27 வயதான விஜயா அம்ரூத். இவர் தன்னை திருமணம் செய்த 15 நாட்களில் ஏமாற்றிவிட்டு, உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக நாசிக்கைச் சேர்ந்த யோகேஷ் ஷிர்சாத் என்பவர் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரின்பேரில், அம்ரூத்தை கைதுசெய்து விசாரித்ததில், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொரோனா ஊரடங்கால் அம்ரூத்திற்கும் அவரது கணவருக்கும் வேலை கிடைக்காததால் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. எனவே ஆண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி நகை மற்றும் உடைமைகளைக் கொள்ளையிட திட்டமிட்டிருக்கிறார்.
அதன்படி, முதலில் ஷிர்சாத்தை திருமணம் செய்து, 15 நாட்கள் இருந்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்து காணாமல் போயிருக்கிறார். அடுத்து, ரோகண்ட், கர்ஜாத்தை சேர்ந்த சந்தீப் தராட் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அதன்பிறகு மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்து ஏமாற்றிச் சென்றிருக்கிறார்.
ஆடு திருடர்களை தனி ஒருவராக மடக்கிப் பிடித்த விவசாயி..!
மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி, உடைமைகளைக் கொள்ளையிட்ட குற்றத்திற்காக அம்ரூத்தை போலீஸார் கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர்.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!