ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஒரு தம்பதியால் அந்த உணவகம் திறக்கப்பட்டது. சுஜாத் அலி மற்றும் அவரது மனைவி ஆயிஷா அப்ரார் தொடங்கிய உணவகத்தில், மீதமாகும் உணவை தேவைப்படும் மக்களுக்குக் கொடுத்து மகிழ்கிறார்கள்.
இரவு பத்து மணிக்கு உணவகத்தை மூடும் அவர்கள், நள்ளிரவு வரையில் ஒரு கவுண்டரை திறந்து வைத்திருக்கிறார்கள். அங்கே உணவு தேவைப்படுவோர் இலவச உணவைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு சூடான உணவை பேக்கில் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.
ஷார்ஜா நகரில் நேஷனல் பெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கு அருகில் பிரியாணி உணவகத்தை அந்த தம்பதிகள் தொடங்கினர். அங்குள்ள அலுவலகப் பணியாளர்களுக்கு குறைவான விலையில் நல்ல உணவை அளித்துவருகிறார்கள். இன்று அவர்கள் 8 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார்கள்.
ஒவ்வொரு உணவகமும் தினமும் மீதமாகும் கைப்படாத சுத்தமான உணவை அவர்களிடம் கொடுக்கிறார்கள். அதனை தேவைப்படும் மக்களுக்கு சுஜாத் அலி தம்பதி வழங்கி மகிழ்கிறார்கள்.
"பொதுவாக எந்த தொழிலாக இருந்தாலும், 60 முதல் 70 சதவீதம் லாபம் கிடைக்கும். அனைத்து வகை மக்களுக்கும் உணவை வழங்குவதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது" என்கிறார் சுஜாத் அலி.
பியூச்சர், ரிலையன்ஸ் இடையில் ஒப்பந்தம் கூடாது - எதிர்க்கும் அமேசான்!
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!