மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையிலும் நேற்று தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது மண்டலமாகவோ மாற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆந்திரா, ஒடிஷா போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அப்பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வராது எனவும் ஒடிஷா ஆந்திராவை நோக்கி செல்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இது வடகிழக்கு பருவமழையில் சேராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி