முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாரிகள், உறவினர்கள், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதலமைச்சர் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஸ்டாலினுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், துணைப்பொதுச்செயலாளர் பொன்முடியும் சென்று மரியாதை செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறினர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்