திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என தலைமை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில், புறநோயாளிகள் மற்றம் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இதுதவிர, கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டடத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவருடன் வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. இது குறித்து திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகாதேவி கூறுகையில், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
ஆனால் சில நோயாளிகள் தற்போது முகக்கவசம் அணியாமல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இனிவரும் நாட்களில் முகக்கவசம் அணியாமல் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. எனவே நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அவர் கூறினார்.
Loading More post
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி