மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா எதிரொலியாக கல்லூரி இறுதியாண்டு மற்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அரியர் மாணவர்கள் மிகுந்த மகிச்சியில் இருந்தனர். மேலும், அரியரை பாஸ் செய்ய வைத்த முதல்வருக்கு நன்றி என இளைஞர்கள் போஸ்டர் மற்றும் பேனர்களை வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அரியர் தேர்ச்சி என்கிற தமிழக் அரசின் முடிவு தவறானது என கூறியிருந்தது. இதனிடையே அண்ணா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது தங்கள் முடிவை தெரிவிப்போம் என ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் ஏஐசிடிஇ - க்கு இடையேயான முரண்பட்ட கருத்து அரியர் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூ வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் எனவும், அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து பேட்டியளித்த மாணவர் ஒருவர், “ஏஐசிடிஇ கருத்தால் அரியர் மாணவர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளோம். தமிழக அரசு தேர்வு முடிகளை உடனடியாக வெளியிட வேண்டும். அரியர் மாணவர் தேர்ச்சி என்ற தமிழக அரசு அறிவிப்பு தற்போது மாணவர்கள் காதில் பூ வைப்பதை போல உள்ளது” எனக் கூறினார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?