சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் ரத்து, பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி என தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் வருகிற 7-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்களை தமிழகத்தில் இயக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே, செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே பயணிகளை மெட்ரோ ரயில் நிலையத்தில் அனுமதிக்க வேண்டும் எனவும், பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், தொற்று அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே மெட்ரோ ரயிலில் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?