கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் பகுதிகளில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீநகர் புறநகர்ப் பகுதியான பந்தா செளக்கில் இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்று மாலையில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் மற்றும் சிஆர்பிஎப் படை வீரர்கள் இணைந்து தேடுதல் பணியைத் தொடங்கினர்.
மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த தீவிரவாதிகளைச் சுற்றிவளைத்து படையினர் தாக்குதல் நடத்தினர். இருளைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக பெரும் வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை பாதுகாப்புப் படையினர் வளைத்தனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சனிக்கிழமை காலையில், புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மூன்று தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
Loading More post
“கொரோனா பரவலால் கும்பமேளாவை பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்” - பிரதமர் கோரிக்கை
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்