மயிலாடுதுறை அருகே மூவலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு மாணவன் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இர்ஃபான் ஹஜ் முகமது(16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இர்ஃபான் ஹஜ் முகமது தனது நண்பர்களுடன் சேர்ந்து காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால், காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட திடீர் சுழலில் சிக்கி மாணவன் இர்ஃபான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடிக்கண்டுபிடித்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!