ஜூலை மாதம் நடத்தப்பட இருந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் நடப்பு ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சில நடத்தப்படாமல் இருந்தன. இந்த தேர்வுகளை ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது இன்று ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு தரப்பு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாது என்றும், அவை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?