தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றிற்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த சில தினங்களாக நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று மட்டும் 1989 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றிற்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் இறந்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களில் இருவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆக இதுவரை 397 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், எவ்வித இணை நோய்களும் இல்லாத 7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 6ம் தேதி முதல் சுமார் 34 பேர் இணை நோய்கள் இல்லாமல் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி